top of page
NEWS TODAY.jpg

இன்றைய செய்திகள்

News pg 1

பிரதமர் நரேந்திர மோடியை புதுதில்லியிலுள்ள அவரின் அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் சமீபத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் தனது நெதர்லாந்து நாட்டுப் பயணத்தின்போது, ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டுவந்தமைக்கு விஜய் நன்றி தெரிவித்தார்.

மேலும், மாநில வாழ்த்துப் பாடலான தமிழ்த் தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலேயே எப்போதும் பாடப்பட்டு வருகிறது என்றும், உள்துறை அமைச்சகத்தால் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட குறிப்பாணையைத் தொடர்ந்து, சில குறிப்பிட்ட அரசு நிகழ்ச்சிகளில், தேசியப் பாடல் முதலாவதாகப் பாடப்பட்டு வருகிறது என்றும், இந்நிலையில், அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப் பாடலைப் பாடுவதற்கு உள்துறை அமைச்சகத்தால் உரிய தெளிவுரையை வழங்குமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மேம்பட்ட நடுத்தர போர் விமான (AMCA) வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் வான்வழி அமைப்பு மையம் (CABS) ஆகியவற்றை தமிழ்நாட்டில் அமைப்பது குறித்து கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (DRDO) ஆலோசனைகள் நடத்தப்பட்டு  வருகின்ற நிலையில், வான்வழி அமைப்பு மையத்தினை (CABS) தமிழ்நாட்டில் அமைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைத் திட்டத்திற்கான பூமி பூஜையை நடத்தவுள்ளதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அறிவித்திருப்பது காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதித் தீர்ப்பிற்கும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கும் முற்றிலும் முரணானது என்றும், இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு விவசாயிகளிடையே பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேற்காணும் திட்டத்தினை பிரதமர் அனுமதிக்கக் கூடாது என ஜல் சக்தி அமைச்சகத்திற்கும், மத்திய நீர்வள ஆணையத்திற்கும் அறிவுறுத்துமாறும் விஜய் கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் மிகக் கவலைக்கிடமான அளவிற்கு அதிகரித்துள்ளது என்றும், 2026 ஆம் ஆண்டில் மட்டும் 12 கைது சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்றும், தற்போது 58 மீனவர்கள் இலங்கையில் காவலில் உள்ளனர் என்றும், 266 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்து, மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் பிரதமரை முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். 

tvk.jpg
News pg 2
collage-down-1765345687.jpg

சென்னை: பதிவுத்துறையில் உள்ள சிக்கல்களை தீர்க்க ரியல் எஸ்டேட் அமைப்புகள் மற்றும் சட்ட நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு புதிய சீர்திருத்தங்களை அரசு உடனே மேற்கொள்ள வேண்டும், நடைமுறைக்கு செட்டாகாத பழைய சட்டங்களை மாற்றி, விதிமுறைகளை எளிமையாக்கி, தேவையற்ற அலைச்சல்களை முழுமையாக நீக்க வேண்டும் என்று அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.. இப்படி செய்தால் மட்டுமே பதிவுத்துறையில் வெளிப்படைத்தன்மை அதிகரித்து இடைத்தரகர்கள் ஆதிக்கமும், லஞ்ச முறைகேடுகளும் ஒழியும் என்றும் பெயிரா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

தமிழ்நாடு பதிவுத்துறையில் நீண்டகாலமாக நிலவி வந்த வழிகாட்டி மதிப்பு குழப்பங்களுக்கும், சொத்து பதிவின் போது பொதுமக்கள் சந்தித்து வந்த நடைமுறை சிக்கல்களுக்கும் தீர்வு காணும் வகையில் புதிய அதிரடி உத்தரவு ஒன்று சமீபத்தில் பிறப்பிக்கப்பட்து.

தமிழக பதிவுத்துறை தலைவர் தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இதுதொடர்பான முக்கிய தெளிவுரை சுற்றறிக்கையை (சுற்றறிக்கை எண் ந.க.எண். 18549/எல்/2026, நாள்: 05.05.2026) அதிகாரப்பூர்வமாக 4 நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.. இந்த அதிரடி நிர்வாக சீர்திருத்த நடவடிக்கையானது, தமிழக ரியல் எஸ்டேட் துறையிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி பாராட்டி வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், பல ஆண்டுகளாக பதிவுத்துறையில் நிலவி வந்த குளறுபடிகளால் பொதுமக்கள், சிறு முதலீட்டாளர்கள், வீடு வாங்கும் இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்துறையினர் கடுமையான தேவையற்ற அலைச்சல், கூடுதல் செலவுகள் மற்றும் மன உளைச்சல்களை அனுபவித்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
 

DTCP Approved plots
starts from 2.49 L /
On Road property
land-survey-number.jpg

சர்வே நம்பர் - வழிகாட்டி மதிப்பு குறித்த தகவல்.

 

சர்வே நம்பர் - வழிகாட்டி மதிப்பு குறிப்பாக, ஒரு சொத்து அமைந்துள்ள பகுதியின் நான்கு பக்கமும் ஒரே சுற்றுச்சுவருக்குள் இருந்து, அதில் பல புல எண்கள் (Survey Numbers) இருந்தால், அந்தப் புல எண்களிலேயே எது அதிகப்பட்ச வழிகாட்டி மதிப்பைக் (Maximum Guideline Value) கொண்டிருக்கிறதோ, அதையே ஒட்டுமொத்த நிலத்திற்கும் கணக்கிட வேண்டும் என்ற கட்டாய நடைமுறை இதுவரை இருந்து வந்தது. இதனால் நில உரிமையாளர்களுக்குத் தேவையற்ற கூடுதல் பணச்சுமை ஏற்பட்டு வந்தது. ஆனால் இப்போது வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையின்படி, அந்தந்தப் புல எண்களுக்கு என்ன வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ, அந்த மதிப்பை மட்டும் கணக்கிட்டுப் பதிவு செய்தாலே போதுமானது என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவையற்ற கூடுதல் பணச்சுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தவறான மதிப்பீடுகள் செய்ய கூடாது மேலும் சொத்தின் தன்மை, பயன்பாடு, சாலை வசதி, இட அமைப்பு மற்றும் நிலத்தின் தனித்துவ அம்சங்களை கருத்தில் கொண்டு மட்டுமே இனி மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், அதிகப்பட்ச மதிப்பை ஒட்டுமொத்த சொத்திற்கும் திணிக்கத் தேவையில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதி, வணிக பகுதி, தொழிற்சாலை பகுதி, விவசாய நிலம் ஆகியவற்றை ஒரே வகை மதிப்பீட்டில் அணுகாமல், அவற்றின் உண்மையான பயன்பாடு மற்றும் நிலைமை அடிப்படையில் மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற உத்தரவு பொதுமக்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது. விவசாய நிலங்களை குடியிருப்பு நிலங்களுடன் ஒப்பிட்டு தவறான மதிப்பீடுகள் செய்யக் கூடாது என்றும் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

Grand Vista farm city - Managed farm plots near Annur/  25 cents / 50 cents / 1 Acre with 2 year maintanance free......

தமிழக அரசு வருவாய் உயரும் இந்தத் துணிச்சலான நிர்வாக முடிவின் மூலம் பதிவுத்துறையில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் குறையும், லஞ்சம் மற்றும் முறைகேடுகள் கட்டுப்படும், சொத்து பரிவர்த்தனைகள் சட்டபூர்வமாகவும் எளிமையாகவும் நடைபெறும் என்று டாக்டர் ஆ.ஹென்றி மிகுந்த நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, ரியல் எஸ்டேட் கூட்டமைப்புகள் மற்றும் சட்ட நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டு, நடைமுறைக்கு பொருந்தாத சிக்கலான விதிமுறைகளைத் தொடர்ந்து எளிமைப்படுத்த வேண்டும் என்றும், இந்த சீர்திருத்தங்கள் தமிழக ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கும் அரசின் வருவாய் உயர்வதற்கும் வழிவகுக்கும் என்றும் டாக்டர் ஹென்றி தனது அறிக்கையில் பாராட்டி நன்றியினைத் தெரிவித்துள்ளார்...!!!

PROP (1).png

click here for more details

செய்திகள்-சென்னை

சென்னை புறநகர் பகுதியில் இதை எல்லாம் கவனிக்காமல் வீடு வாங்கினால்.. கடைசி வரை பட்டா வாங்கவே முடியாது
ch.jpg

M - SAND

இன்று முதல் எம் சாண்ட், பி சாண்ட் மணல் விலை உயருகிறது..
வீடு கட்டுவோர் அறிய வேண்டியவை....
blog1.jpg

REIT ?
 

சாமானியர்களும் ரியல் எஸ்டேட் சொத்துகளில் முதலீடு செய்ய எளிதான வழி; REIT பற்றி தெரியுமா?
REITs.jpg

HOME LOAN ?
 

சொத்தின் மதிப்பு, பணவீக்கம், வரிச் சலுகை... வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டுவது லாபமா?
housing-loan-1.jpg

Are you a Gurarnter,
Know the Risk!

கேரண்டி கையெழுத்து போடுறீங்களா? லோன் அவங்களுக்கு! பிரச்சனை உங்களுக்கு! இதை ஒரு முறை கவனிங்க!
images.jpg

Foldable House !

மூணு, நாலாக மடிக்கக்கூடிய வீடு..
இப்போ இதுதான் டிரென்ட்.. விலை என்ன தெரியுமா..?
download (2).jpg

RBI ANNOUNCEMENT

``இனி கடன் வாங்கும்போது இதைக் கட்டாயம் பாருங்க..." ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
rbi.jpg

HOME LOAN ?
 

சொத்தின் மதிப்பு, பணவீக்கம், வரிச் சலுகை... வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டுவது லாபமா?
housing-loan-1.jpg
bottom of page